கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
1. தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மசித்த வெள்ளரிக்காய் கூழை எடுத்து, அத்துடன் சிறிது தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால், வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.
2. தர்பூசணி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த பேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். *
பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும்.
3. தர்பூசணி மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு சில துண்டுகள் தர்பூசணியை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, கோடையிலும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.
4. தர்பூசணி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் ஏற்றது.
5. தர்பூசணி டோனர் *
தர்பூசணியை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். நீங்கள் இதுவரை கெமிக்கல் டோனரை இதுவரை பயன்படுத்தி வந்தால், கோடையில் தர்பூசணி டோனரைப் பயன்படுத்துங்கள்.
* அதற்கு தர்பூசணியின் ஒரு துண்டை எடுத்து, அதை முகத்தில் நேரடியாக தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இதனால் முகம் பளிச்சென்று இருப்பதோடு, நீரேற்றத்துடனும், பொலிவோடும் இருக்கும்.



