ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி
தேவையான பொருட்கள்: –
நறுக்கிய மாங்காய் – 1 கப்(புளிப்பு இல்லாதது)
100 கிராம் வெள்ளை எள்
3 பச்சை மிளகாய்
1 பூண்டு பல்
1 ஸ்பூன் கடுகு, அரைத்தது
கால் ஸ்பூன் வெந்தயம், அரைத்தது
கால் ஸ்பூன் மஞ்சள்
உப்பு தேவையான அளவு
தாளிக்க: –
1/2 ஸ்பூன் சீரகம்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 கொத்து கறிவேப்பிலைகள்
1 வர மிளகாய்
1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
1 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை: –
முதலில் ஒரு கடாயில் எள்ளை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
– முதலில் நறுக்கிய பச்சைக் மாங்காய் துண்டுகளுடன் மஞ்சள் மற்றும் சிறிதளவு உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
– மாங்காயிலிருந்து சாறு வெளிவந்து, அது மென்மையாகவும் குழைந்த நிலைக்கு மாறும் வரை வேக வைத்து பின்னர் ஆறவிடவும்.
– ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய மாங்காயுடன் அரைத்த எள் பொடி, அரைத்த கடுகு, அரைத்த வெந்தயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, கெட்டியான பசை போன்ற கலவை கிடைக்கும் வரை அரைக்கவும். இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
– இந்த பச்சடியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
– எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, அவை வெடிக்கும் வரை வறுக்கவும்.
– வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து கிளறவும். இந்தத் தாளிப்பை சட்னியின் மீது ஊற்றி, நன்கு கலக்கவும்.
– இது இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். இதனை 3 முதல் 4 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடலாம்.



