அழகு..அழகு..புதியவை

உன்னத அழகை பெற வீட்டில் உள்ள உணவுப்பொருட்களே போதும் – எப்படி தெரியுமா?

உன்னத அழகை பெற வீட்டில் உள்ள உணவுப்பொருட்களே போதும் - எப்படி தெரியுமா?

மசித்த பப்பாளியை வாரத்துக்கு 10 முதல் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பொலிவாக மாறிவிடும்.

காய்ச்சாத பசும்பாலை தினமும் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகும்.

காபித்தூள், தக்காளி, அரிசி மாவு மூன்றையும் ஒன்றாக கலந்து ஸ்கிரப் தயாரித்து முகத்தில் பயன்படுத்தினால் இறந்த செல்கள் நீங்கி முகம் பளபளக்கும்.

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு சாறை தினசரி பருக, முகம் பொலிவடையும்.

தக்காளிச் சாறு, தயிர் மற்றும் ஓட்ஸ் மீல் மூன்றையும் விழுதாக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், தழும்புகள் மற்றும் கொப்புளங்கள் நாளடைவில் மறைந்துவிடும்.

வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை இரண்டையும் தண்ணீர் கலந்து பசை போல தயாரித்து முகத்தில் தடவி 4 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, இறந்த செல்கள் நீங்கி முகம் இளமையாகவும், பொலிவாகவும் ஆகும்.

மசித்த பப்பாளி மற்றும் பாதாம் பருப்பை விழுதாக்கி முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து ஸ்கிரப் செய்து பின்பு கழுவுவதால் முகம் மென்மையாக மாறிவிடும்.

முகத்தில் தேனைத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவ, இறந்த செல்கள் நீங்கி வறண்ட சருமம் ஈரப்பதமாக மாறிவிடும்.

எலுமிச்சம்பழத் தோலை அரைத்து முகத்தில் 5 முதல் 7 நிமிடங்கள் தடவி பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ, சரும நிறத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தை மென்மைப்படுத்தும்.

மசித்த பப்பாளியை வாரத்துக்கு 10 முதல் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பொலிவாக மாறிவிடும்.

தயிர், தேனுடன் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து விழுதாக மாற்றி முகத்தில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் ‘பளிச்’சென மாறிவிடும்.

தோல் நீக்காமல் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து அதில் ஒரு முட்டை, தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் ஈரத்துணியால் துடைக்க, முகம் பிரகாசமாக ஆகிவிடும்.

தர்பூசணியை அரைத்து அதில் எலுமிச்சைச் சாறு கலந்து விழுதாக தயாரிக்க வேண்டும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் பொலிவோடு இருக்கும்.

மேற்கண்ட குறிப்புகளில் அவரவர் முகத்துக்கு உகந்த குறிப்புகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்வதன் மூலம் இளமையாகவும் பொலிவாகவும் முகத்தை வைத்திருக்க முடியும். எல்லாவற்றையும் விட, ஆரோக்கியமான சரிவிகித உணவால் உடல் ஆரோக்கியம் பெற்று, முகம் பொலிவடையும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker