பலாக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்…
பலாக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்...
தேவையான பொருட்கள்:
* பிஞ்சு பலாக்காய் – 1
* தண்ணீர் – 1 டம்ளர்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* உப்பு – சிறிது
வறுத்து மசாலா அரைப்பதற்கு…
* அன்னாசிப்பூ – 1 இதழ்
* கிராம்பு – 3
* ஜாதிபத்திரி – 1 சிறிய துண்டு
* பட்டை – 1 சிறிய துண்டு
* கல்பாசி – சிறிது
* ஏலக்காய் – 2
* சோம்பு – 1/4 டீஸ்பூன்
* மல்லி – 1 டீஸ்பூன்
* மிளகு – 15
* சீரகம் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – 1 கொத்து
* தேங்காய் – 4 சில்லு
* சின்ன வெங்காயம் – 2
தாளிப்பதற்கு…
* கடலை எண்ணெய் – 4 ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருபபு – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
* பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சிறிது
* மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – சிறிது
* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பலாக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி நீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட பலாக்காய், 1 டம்ளர் நீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை அடுப்பில் வைத்து மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அன்னாசிப்பூ, கிராம்பு, ஜாதிபத்திரி, பட்டை, கல்பாசி, ஏலக்காய், சோம்பு, மல்லி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள பலாக்காயை மட்டும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லி மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி பிரட்டி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் நன்கு வெந்ததும், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பலாக்காய் சுக்கா தயார்.



