சமையல் குறிப்புகள்புதியவை

இன்று சுவையான மீன் புலா‌வ் செய்யலாமா?

மீனில் வறுவல், பிரியாணி, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புலா‌வ் அரிசி – ½ கிலோ
துண்டு மீன் – கால் கிலோ
வெங்காயம் – 4
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள்,
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் – ½ ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்,
சீரகம் -1 ஸ்பூன்
எலுமி‌ச்சை – 1
கொத்தமல்லி இலை – 1 சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு

செய்முறை

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு இதனுடன் மல்லித்தூள், சோம்பு, ‌சீரகத்தூள், எலுமிச்சம் சாற்றை ஊற்றி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த மீன் துண்டுகளைப் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் ஊற வைத்த அரிசி, உ‌ப்பு, ‌மிளகா‌ய்த் தூள், கொத்தமல்லி இலை மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு மேலாக மீனை வைத்து தம் போட்டு இறக்கினால் மீன் புலாவ் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker