சமையல் குறிப்புகள்

மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்

பப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும். பப்பாளி இஞ்சி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • பப்பாளி பழம் – சிறியது (பாதி),
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
  • வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்),
  • காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப்,
  • மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப,
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு,
  • கிரீம் – சிறிதளவு.
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

  • பப்பாளி பழம், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து அதனுடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி… சூப் கப்பில் ஊற்றவும்.
  • அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
  • சூப்பரான பப்பாளி இஞ்சி சூப் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker