நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி – ஒரு தடவை செஞ்சு பாருங்க – ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம்

பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் ஒரு நாள் நெல்லை ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். ஏனெனில் திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டுமல்ல சுவையான உணவுகளுக்கும் பெயர் பெற்றது. வித்தியாசமான குழம்பு வைக்க விரும்புனா இந்த பொங்கல் ஸ்பெஷல் திருநெல்வேலி ஸ்டைல் தலகக் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.
இந்த நெல்லை ஸ்டைல் தலகக் குழம்பு செய்வது மிகவும் எளிதானது, அதேசமயம் மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் பத்துக்கும் மேற்பட்ட காய்கறிகள் சேர்க்கப்படுகிறது. இந்த தலகக் குழம்பு பொங்கல் நேரத்தில் அனைவரின் வீட்டிலும் செய்யப்படும் குழம்பாகும். ஒருமுறை இந்த குழம்பு செய்துவிட்டால் ஒரு வாரம் வரை சூடு பண்ணி வைத்து சாப்பிடலாம். இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை அதிகரிக்கும்.
உங்களுக்கு நெல்லை ஸ்டைல் தலகக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை ஸ்டைல் தலகக் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: –
கலவைக் காய்கறிகள் – 2 கப்(கத்திரிக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு, மொச்சை, முருங்கைக்காய் மேலும் உங்களுக்கு பிடித்த காய்கறிகள்)
– புளி – நடுத்தர அளவு
– உப்பு – தேவையான அளவு
– மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
– நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
அரைப்பதற்கு:
– தேங்காய்
– 1/2 கப் – உளுத்தம் பருப்பு
– 1 ஸ்பூன் – கடலைப்பருப்பு
– 1 ஸ்பூன் – வர மிளகாய்- 10
– பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
– பச்சரிசி – 1 ஸ்பூன்
– எள் – 1 ஸ்பூன்
தாளிக்க: – நல்லெண்ணெய் -1 ஸ்பூன் – கடுகு – 1/2 ஸ்பூன் – வர மிளகாய் – 2 – கறிவேப்பிலை – 1 கொத்து செய்முறை: – புளியை சூடான நீரில் ஊறவைக்கவும், அதே நேரத்தில் காய்கறிகளை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். – காய்கறிகளைக் கழுவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
– ஒரு குக்கரில் காய்கறிகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் குறைந்த அளவு தண்ணீர் மட்டும் ஊற்றி 1-2 விசில் வரும் வரை வேகவைக்கவும். உடனே ஆவியை வெளியேற்றிவிடவும். – தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். காய்கறிகள் பாதி வெந்திருந்தால் போதும்.
– ஒரு கடாயில் எள் மற்றும் அரிசியை தனித்தனியாகச் சேர்த்து, வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டவும். – அதே வாணலியில் பாதியளவு எண்ணெயைச் சூடாக்கி, அதில் வர மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, அதே தட்டில் கொட்டவும். – பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காயைச் சேர்த்து வாணலியின் சூட்டிலேயே வதக்கவும். வறுத்த தேங்காயில் 2 டீஸ்பூன் அளவு தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ளதை வறுத்து வைத்துள்ள மற்ற பொருட்களுடன் சேர்க்கவும். – வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறிய பிறகு, 1/4 கப் தண்ணீர் சேர்த்து, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். – ஒரு ஆழமான பாத்திரத்தில், புளிக் கரைசலை ஊற்றி அதனுடன் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். இது நன்கு கொதித்து, புளியின் பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்கவிடவும். – இப்போது உப்பு, அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து, கலவை கெட்டியான குழம்பு பதத்திற்கு வந்து பாத்திரத்தின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும். – இப்போது வேகவைத்த காய்கறிகள் மற்றும் காய்கறி வேகவைத்த நீரைச் சேர்க்கவும். உப்பைச் சரிபார்த்து, மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, தனியாக எடுத்து வைத்துள்ள 2 தேக்கரண்டி வறுத்த தேங்காயைச் சேர்த்து குழம்பை கொதிக்க விடவும். – ஒரு தாளிக்கும் கரண்டியில் மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கவும். அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் கிள்ளிய வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். – தயார் செய்து வைத்துள்ள குழம்பின் மீது இந்தத் தாளிப்பை ஊற்றிக் கிளறினால் சுவையான நெல்லை ஸ்டைல் தலகக் குழம்பு ரெடி!



