2. சிலரிடம் ஒருசில கெட்ட பழக்கவழக்கங்கள் இருக்கும். அதனை கைவிட முடியாமல் தவிப்பார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அதில் இருந்து மீள முடியாமல் இருக்கும் சூழலில் நெருங்கி பழகுபவர்கள் கூறும் ஆலோசனை பலன் கொடுப்பதாக அமையலாம். விரைவாக கெட்டப்பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
3. சிலர் எந்த செயலையும் ஈடுபாட்டோடு செய்வதற்கு முன்வர மாட்டார்கள். நாளை செய்யலாம், அதற்கு மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். அப்படி தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பதால் ஏற்படும் இழப்புகளை நெருங்கி பழகுபவர்கள் புரியவைக்கலாம். அவர்களே உடன் இருந்து அந்த செயலை முடிப்பதற்கு பக்கபலமாக இருக்கலாம். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறலாம்.
4. சிலருக்கு வாழ்க்கை மீது பிடிப்பே இருக்காது. ஒருவித சலிப்புடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பார்கள். எதிலும் ஆர்வம் இல்லாமல் சோம்பேறித்தனத்துடன் காட்சியளிப்பார்கள். குடும்ப நலனில் அக்கறை கொண்ட நபர்கள், வாழ்க்கையை புரியவைத்து அதன் மீது பற்றுதலை ஏற்படுத்தி இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது.
5. அலுவலக பணியில் நெருக்கடியான சூழலில் சக ஊழியர் உடன் இருந்து வேலையை முடிப்பதற்கு உதவி இருக்கலாம். நன்றி என்பது சிறிய வார்த்தைதான். ஆனால் வாழ்வின் அர்த்தத்தை புரிய வைத்தவர்களுக்கு, உங்களையே புதுப்பிக்க வழிகாட்டியவர்களுக்கு நீங்கள் சொல்லும் நன்றி என்ற இந்த சிறிய வார்த்தை மிகப்பெரிய சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆறுதலையும் நிச்சயம் தரும். எனவே, யாராவது எந்த வகையிலாவது உதவி இருந்தால், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டியிருந்தால், தயங்காமல் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.