Uncategorisedசமையல் குறிப்புகள்

கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா – எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க…

உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சட்னி, சாம்பார் செய்வீர்களா? இப்படி செய்து உங்களுக்கே போடித்துட்டவிட்டமத? அப்படியானால் ஒருமுறை கும்பகோணம் கடப்பாவை செய்யுங்கள். இந்த கும்பகோணம் கடப்பா செய்வதென்று சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கடப்பா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, பூரி, சப்பாத்திடன் சாப்பிடலாம்.

உங்களுக்கு கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு…

* பாசிப்பருப்பு – 1 கப்
* தண்ணீர் – 2 1/2 கப்
* பெரிய உருளைக்கிழங்கு – 1
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* பட்டை – 1 * கிராம்பு – 2
* கல்பாசி – சிறிது
* அன்னாசிப்பூ – 1 இதழ்
* பிரியாணி இலை – 1
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் – 1 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)

* கறிவேப்பிலை – 1 கொத்துங
* பச்சை மிளகாய் – 2 (இடித்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* வேக வைத்த உருளைக்கிழங்கு (மசித்தது)
* தண்ணீர் – 3 கப் அல்லது 3/4 லிட்டர்
* வேக வைத்த பருப்பு
* அரைத்த தேங்காய் விழுது
* கொத்தமல்லி – சிறிது

தேங்காய் விழுதிற்கு…
* துருவிய தேங்காய் – 1 கப்
* முந்திரி – 10
* தண்ணீர் – சிறிது

செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பை போட்டு நீரில் 3 முறை கழுவிவிட்டு, பின் அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் இரு துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அதில் கறிவேப்பிலை மற்றும் இடித்த பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வதங்கி கொண்டிருக்கும் தக்காளியுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து கிளறி, அத்துடன் 3 கப் நீரை ஊற்றி நன்கு நீரை கொதிக்க வைக்க வேண்டும். * நீர் நன்கு கொதிக்க தொடங்கியதும், அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கும்பகோணம் கடப்பா தார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker