ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்புதியவை

ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?

பொதுவாக நமது வீடுகளில் காலையில் நேரம் சென்று எழும்பி விட்டால் உடனே செய்வது உப்பு மா தான்.

இன்னும் சிலர் இட்லி, தோசை, பொங்கல் செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருந்தால் உப்புமாவையே வித்தியாசமாக செய்வார்கள்.

இது வீட்டிலுள்ளவர்களின் விருப்பங்கள் மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் வைத்து இலகுவாக முடிவு செய்யலாம். ரவையில் உப்பு மா சாப்பிட்டு சலித்து விட்டது என்றால் பிரட்டை வைத்து செய்யலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிரட் உப்புமா எப்படி இலகுவாக செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி? | Bread Upma Recipe

தேவையானப் பொருள்கள்

  • பிரட் – 5 துண்டுகள்
  • பெரிய வெங்காயம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள்- சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • உப்பு- சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – அரை ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு- அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் / வர மிளகாய் – 1

முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

அதன் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி? | Bread Upma Recipe

அதனுடன் வெங்காயம் போட்டு நன்றாக வதங்கிய உடன், இஞ்சி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் போட்டு கிளறி விடவும்.

வெங்காயம் வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய பிரட்டு துண்டுகளை போட்டு கிளறி விடவும். சில நிமிடங்கள் எண்ணெய் போட்டு எடுத்தால் சுவையான பிரட் உப்புமா தயார்!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker