தாய்மை-குழந்தை பராமரிப்பு

கோடை பாதிப்பில் இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது?

வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.

பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

உடல் உஷ்ணம் தவிர்க்க நீருடன் எவற்றை சேர்க்க வேண்டும்? வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவும். மண்பாண்ட தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.

கோடை பாதிப்பை தவிர்க்க வேறு விளையாட்டுக்கள் என்ன?

உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கை, சுரைக்காய், புடலை, பூசணி காய்கள் சாப்பிடலாம். வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால்,சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.

கோடையை சமாளிக்க எப்படி குளிக்க வேண்டும்?

குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளை குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker