அழகு..அழகு..புதியவை

முகம் கவர்ச்சியா இருக்கணுமா, ஒரு மாசம் கேரட் மட்டும் இப்படி யூஸ் பண்ணுங்க!

கேரட்டை கொண்டு சருமத்தை எப்படியெல்லாம் ஜொலிக்கவைக்கலாம் என்பது தெரியுமா ? அழகை அள்ளி தரும் இயற்கை பொருள்களில் கேரட் ஒன்று.

கேரட் விலை மலிவானது. எப்போதும் கிடைக்க கூடியதும் கூட. கேரட் சாறாகவோ, பொரியலாகவோ எடுக்கும் போது அது உடல் ஆரோக்கியம் போன்றே சரும ஆரோக்கியத்தையும் அழகாக மாற்றும். கேரட்டை சாப்பிடுவதன் மூலமே சருமம் அழகாக இருக்கும் போது இதை முகத்துக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் அழகு இன்னும் அதிகம் என்னும்போது இதை பயன்படுத்தி தான் பார்க்கலாமே.

உங்கள் சருமம் எண்ணெய் சருமமாகவோ, உலர் சருமமமாகவோ, சென்சிடிவ் ஆக என எப்படி இருந்தாலுமே கேரட்டை பயன்படுத்துவதன் மூலம் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதை பயன்படுத்திய பிறகு நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.

​கேரட் சருமத்துக்கு

கேரட் கண்களுக்கும் கூந்தலுக்கும் நன்மை செய்யகூடியது. பீட்டா கரோட்டினை உள்ளடக்கிய இது சிறந்த தோல் பூஸ்டர் என்று சொல்லலாம்.

கேரட்டை சாதாரணமாக வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் அழகான சருமத்தை ஒரே மாதத்தில் பெற்றுவிட முடியும்.இந்த எளிமையான முறையில் உங்கள் சருமத்தை அழகுப்படுத்த செய்ய வேண்டியது என்ன என்பதை பார்க்கலாம். உங்கள் சருமம் எந்த வகையை சார்ந்தது. அதற்கேற்ற பேக் என்ன என்பதை பார்க்கலாம்.

​வறண்ட சருமத்தை பெற்றிருந்தால்

உங்கள் சருமம் எப்போதும் வறண்ட நிலையை கொண்டிருந்தால் முதலில் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க செய்ய வேண்டும். இதற்கான கேரட் ஃபேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.

தேவை

கேரட் விழுது – 2 டீஸ்பூன்

க்ரீம் – அரை டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேக் தயாரித்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி விடவும். இதை மென்மையாக கைகளில் தேய்த்து விடவும். 25 நிமிடங்கள் கழித்து முகத்தை மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு முகத்தில் டோனரை பயன்படுத்தலாம் அதை தொடர்ந்து மாய்சுரைசர் அல்லது க்ரீம் பயன்படுத்த வேண்டும்.

இந்த பேக் வாரத்தில் மூன்று முறை செய்தால் தான் ஒரே மாதத்தில் முகத்தில் ஜொலிப்பை காணலாம்.

எண்ணெய் சருமத்தை கொண்டிருந்தால்

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க கேரட் உதவக்கூடும். அதிலும் எண்ணெய்ப்பசை கொண்டிருப்பவர்களின் சருமத்தை பாதுகாக்கவும் இவை உதவுகிறது. இதற்கு கேரட் உடன் பன்னீர் கலந்து பயன்படுத்தலாம்.

தேவை

கேரட் – 2 டீஸ்பூன் விழுதாக அரைத்தது

பன்னீர் – 2 டீஸ்பூன்

கடலை மாவு – 1 டீஸ்பூன்

இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேக் செய்து முகத்தில் போட்டு 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். இவை உலர்ந்ததும் குளிர்ந்த நீர் விட்டு முகத்தை கழுவி எடுக்கவும்.

இந்த பேக் பயன்படுத்திய பிறகு டோனரை பயன்படுத்தலாம். பிறகு திரவ க்ரீம்களை பயன்படுத்தலாம். இந்த பேக் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்பசையை உறிஞ்ச தொடங்குகிறது. இதனால் எண்ணெய் சுரப்பு கட்டுக்குள் வரும்.

​முகத்தில் பருக்கள் இருந்தால்

முகப்பருக்கள் தற்காலிகமாக இருந்தாலும் அது அவ்வபோது வந்து அழகை கெடுப்பதாக இருந்தால் இதை முழுவதுமாக வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். கேரட் உடன் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து பேக் தயார் செய்யுங்கள்.இது உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களை விரட்டி முகத்தை தெளிவாக வைத்திருக்க செய்யும்.

தேவை

கேரட் – 2 டீஸ்பூன் மசித்தது

இலவங்கப்பட்டை தூள் – அரை டீஸ்பூன்

பன்னீர் – 1 டீஸ்பூன்

இந்த மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் போன்று கைகளால் தேய்க்கவும். குறிப்பாக முகப்பரு இருக்கும் இடங்களில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி பன்னீரை தடவி விடவும். அதன் பிறகு ஆண்டி சீரம் தடவலாம். வாரத்தில் மூன்றூ முறை இதை செய்து வந்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் முகம் அழகாகும்.

​மந்தமான சருமத்தை கொண்டவர்கள்

முகம் எப்போதுமே டல்லாக சோர்வாக இருக்கு என்பவர்கள் சருமத்தை ஆரோக்கியமாக அழகாக பளபளப்பாக வைத்திருக்க விரும்பினால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

தேவை

கேரட் விழுது 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிட்டிகை

சந்தன தூள் – ஒரு டீஸ்பூன்

இந்த மூன்றையும் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு ஆக்கவும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு முகம் கழுவினால் போதும். பிறகு டோனரை பயன்படுத்துங்கள். அதன் பிறகு கற்றாழை ஜெல் தடவவும். வாரத்தில் இரண்டு முறை இதை செய்யுங்கள்.

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு ஏற்ப வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்திவந்தால் ஒரே மாதத்தில் உங்கள் சருமம் தோற்றம் அதிசயத்தக்க அளவில் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker