ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

கால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள்? அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்

பலருக்கும் ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு உட்காரும் பழக்கம் இயல்பாகவே இருக்கும்.

பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.

ஏனெனில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும், அதன் பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுகின்றது.

ஒரு பெண் கால் மேல் கால் போட்டு உட்காருவதால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகின்றது.

கால்மேல் கால்போட்டு உட்காருவது பிறப்பு தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பது உங்கள் இரத்த அழுத்தத்தில் சிறிது அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

அடிக்கடி காலை குறுக்கே போட்டு உட்கார்வதன் மூலம் இடுப்பு எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது.

பொதுவாகாவே 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் கால்களை குறுக்கே போட்டு உட்காரக்கூடாது. அதிலும் முக்கியமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றுக்குள் இன்னொரு உயிரைச் சுமக்கும்போது, உங்கள் உடல் பல உள் மாற்றங்களைச் சந்திக்கிறது. இருப்பினும், கர்ப்பிணி பெண்கள் கால்மேல் கால்போட்டு அமர்வது குழந்தை பிறப்பில் சிக்கலை ஏற்படுத்தும்.

காயம், கீல்வாதம் அல்லது வேறு எந்த சுகாதார நிலை போன்ற காரணங்களால் முழங்கால் வலி ஏற்படலாம். அரிதான சந்தர்ப்பத்தில் மட்டுமே கால்மேல் கால்போட்டு குறுக்காக அமர்ந்திருப்பது மூட்டு அல்லது முழங்கால்கள் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker