சமையல் குறிப்புகள்புதியவை

வாய்க்கு ருசியான முட்டை பக்கோடா குழம்பு…

முட்டையில் ஆம்லெட், போண்டா, செய்து இருப்பீங்க. ஆனால் இன்று , முட்டையைக் வைத்து பக்கோடா செய்து,  அந்த  பக்கோடாவை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

முட்டை – 4
உருளைக்கிழங்கு – 2
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான

வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
அரைத்த தக்காளி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு , அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு கரண்டியை கொண்டு கிளறி விட வேண்டும்.

* அடுத்ததாக , ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் முட்டைக் கலவையை ஊற்றி பக்கோடா போன்று, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் பக்கோடாக்களாக போட்டுக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காய பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனவுடன் அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி , 1/2 கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

* கடைசியாக , பொரித்து  வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான முட்டை பக்கோடா குளம்பு தயார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker