ஃபேஷன்அழகு..அழகு..புதியவை

வயதானாலும் முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும் பேஸ் பேக்

எல்லோருக்கும் வயது கூடினாலும் பார்க்க இளவயது போன்ற லுக்கில் இருக்கத்தான் ஆசை. சருமத்தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்க உதவும் ஃபேஸ் பேக்கை பார்க்கலாம்.

வயதானாலும் முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும் பேஸ் பேக்
வயதானலும் முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும் பேஸ் பேக்
பெண்கள் தற்போது அழகை காப்பாற்ற பெரும்பாலும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை நாடுவதால் முகத்தின் அழகு விரைவாகவே பொலிவிழந்து சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடுகிறது. எல்லோருக்கும் வயது கூடினாலும் பார்க்க இளவயது போன்ற லுக்கில் இருக்கத்தான் ஆசை. சருமத்தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், முகத்தை இறுக்கமாக வைக்கவும் உதவும் ஃபேஸ் பேக் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்தது போன்று முகத்தை இளமையாக வைக்கலாம். வீட்டிலேயே செய்யகூடிய அருமையான பேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.

களிமண் மூலம் சருமத்தை பாதுகாக்கும் சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. இயற்கையான முறையில் முகத்தின் அழகை கொடுப்பதாக அழகு கலை நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.

தேவையான பொருட்கள்

களிமண் – 2 டீஸ்பூன்
பன்னீர்- தேவைக்கு
நறுமண எண்ணெய்- 3 சொட்டு

களிமண், எண்ணெய், தண்ணீர் மூன்றையும் கிண்ணத்தில் நன்றாக கலக்கவேண்டும். இவை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை குழைத்து முகம், மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. திசுக்களை குறையில்லமால் சரிசெய்வதன் மூலம் முகம் புத்துணர்ச்சி பெறுகிறது. முகத்தில் நெற்றியில் விழும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு அல்லது ஒருமுறையாவது கட்டாயம் போட வேண்டும்.

தேவையான பொருட்கள்

கடற்பாசி தூள்- 1 தேக்கரண்டி
வெதுவெதுப்பான நீர் – தேவைக்கு

இரண்டையும் நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விட வேண்டும். இவை நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இதை பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி நிறைந்த கடற்பாசி ஃபேஸ் பேக் முகத்துக்கு பயன்படுத்தும் போதெல்லாம் முகத்தை மென்மையாக்குகிறது. முகத்தின் வறட்சியை காணாமல் போக செய்கிறது. இவை கடினமான சருமத்தை இளக்கி மிருதுவாக்குகிறது. அதோடு இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

பேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை காய்ச்சாத பால் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது சருமத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்தும். அதனால்தான் முகத்துக்கு க்ளென்சிங் செய்ய பால் சிறந்தது என்று சொல்வார்கள்.

ஃபேஸ் பேக் போடும் போது முகத்துக்கு ஃபேஸ் காஸ் என்று சொல்லக்கூடிய மெல்லிய துணியை முகத்தின் மேல் போட்டு அதன் மேல் போடலாம். இதனால் கண்களை சுற்றி நன்றாகவே அப்ளை செய்யமுடியும். உங்கள் வயதை குறைத்து காண்பிக்கும் இந்த ஃபேஸ் பேக் எல்லாமே எளிதாக வீட்டில் தயாரிக்ககூடியவையே என்பதால் ஒய்வாக இருக்கும் போதெல்லாம் பயன்படுத்தினாலே போதுமானது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker