ஆரோக்கியம்புதியவை

கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யணுமா? கட்டாயம் இந்த பயிற்சியை செய்திடுங்க

இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்கள் கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சினையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

இதற்காக கண்ட கண்ட மருந்துகளை எடுப்பது பக்கவிளைவுகளே ஏற்படுத்தும். இதனை தடுக்க நாம் வீட்டில் இருந்தப்படியே சிறு சிறு பயிற்சிகள் அல்லது யோகசானங்களை செய்வது சிறந்தது.

அந்தவகையில் “பத்த கோணாசனம்” என்ன ஆசனம் நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய உதவி புரிகின்றது.

மேலும் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க செய்யவும், ரத்த ஓட்டமும் அதிகரிக்க செய்கின்றது.

தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

செய்முறை :

  • முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை மேலே படத்தில் உள்ளவாறு மடக்குங்கள்.
  • இரு கால்களும் மடக்கி சம நிலையில் வைத்திருங்கள். இருபாதங்களும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்கவேண்டும். கைகளால் பாதங்களை பொத்திக் கொள்ளுங்கள்.
  • இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.
  • முட்டிகள் தரையை தொடக் கூடாது. தொடைகளை மட்டும் சிறிது தரையில் தாழ்த்தினால் முட்டிகள் சம நிலையில் சரியாக இருக்கும்.
  • அந்த நிலையில் 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் முட்டிகளை உயர்த்தி, கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பலன்கள் :

மன அழுத்தம், தேவையில்லாத குழப்பங்கள், கருப்பை நீர்கர்ட்டி ஆகியவைகள் வராமல் தடுக்கும்.

அது போலவே முறையற்ற மாதவிலக்கு சீராகும்.

முடிஉதிர்தல், முகப்பரு, உடல் பருமன் ஆகியவைகளும் சீராகும். தினமும் இரு வேளைகள் செய்யுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker