சமையல் குறிப்புகள்
ரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் குருமா
தோசை, நாண், சாதம், புலாவ், தோசைக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் குருமா. நாளை ரம்ஜான் ஸ்பெஷல் சிக்கன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் – 1 கிலோ
- இஞ்சி – 2 துண்டு
- பூண்டு – 15 பல்
- பெ.வெங்காயம் – 5
- பச்சை மிளகாய் – 6
- தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – 1 டீஸ்பூன்
- பட்டை – 1 துண்டு
- சீரகம் – 3 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லித் தழை – 1 கட்டு
செய்முறை :
- கொத்தமல்லி, சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த இஞ்சியையும், பூண்டு விழுதுடன் தயிர் கலந்து இறைச்சி துண்டுகள் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- கொத்தமல்லிதழை, மிளகாய், சீரகம், வெங்காயம் போன்றவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, மஞ்சள் தூள், அரைத்த பொருட்களை கொட்டி வதக்கவும்.
- அனைத்த பச்சை வாசனை போனவுடன் இறைச்சி துண்டுகளை போட்டு கிளறி விடவும்.
- நன்றாக வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- இறைச்சி துண்டுகள் நன்றாக வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
- சூப்பரான சிக்கன் குருமா ரெடி.