சமையல் குறிப்புகள்

சத்து நிறைந்த வரகரிசி காய்கறி தோசை

தேவையான பொருட்கள்

  • வரகரிசி – கால் கிலோ,
  • இட்லி அரிசி – கால் கிலோ
  • உளுந்து – 50 கிராம்
  • வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

காய்கறி மசாலா செய்யத் தேவையானவை

  • கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் – சிறிதளவு
  • உருளைக் கிழங்கு – சிறியது 1
  • தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • குடைமிளகாய் – 1
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பூண்டு – 2 பல்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்




செய்முறை

  • கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கை துருவிக்கொள்ளவும்.
  • குடைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வரகரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.
  • போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்து புளிக்கவையுங்கள்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
  • அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ்,தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
  • காய்கறிகள் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
  • வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள்.
  • தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள்.
  • தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker