சமையல் குறிப்புகள்புதியவை

நாவூற வைக்கும் மலபார் இறால் கறி

கேரளாவின் மிகவும் பிரசித்த பெற்ற சுவையான மலபார் இறால் கறி எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :


* இறால் – 300 கிராம்
* மாங்காய் – 1
* இஞ்சி – 1
* பச்சை மிளகாய் – 5
* தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

குழம்பு செய்ய:
* தேங்காய் – 1
* மிளகாய்தூள் – தேவையான அளவு
* மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி
* சீரகம் – 1 தேக்கரண்டி
* வெந்தயத்தூள் – அரை தேக்கரண்டி
* சின்ன வெங்காயம் – 50 கிராம்
* கறிவேப்பிலை – தேவையான அளவு
* உப்பு – தேவையான அளவு

செய்முறை :
* இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

* மாங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* தேங்காயை துருவிக்கொள்ளவும்.

* இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குழம்புக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி அடுப்பில் வைத்து மூடிவைத்து சிறிது வேக விடவும்.

* இறால் வெந்ததும் அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும்.

* கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

* பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.

* இப்போது சுவையான மலபார் இறால் கறி தயார்.

* இது ஆப்பம், இட்லி, தோசை, சோறு என அனைத்து உணவிற்கும் மலபார் இறால் கறி அருமையாக இருக்கும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker