உறவுகள்புதியவை

திருமணமானவர்கள் மட்டும் இதை படியுங்கள்

ஆண்கள் எப்போதும் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொள்வதில் குறியாய் இருப்பார்கள். (married couple healthy sex tips) ஆனால், உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை விட, சிலசமயம் தானே உருவாகும் நேரங்களில் நீங்கள் கட்டாயம் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் உங்கள் மனமும், வாழ்க்கையும் சாந்தியடையும்.

தாம்பத்தியம் வைத்துக்கொள்வதன் மூலமாக உடல்திறன் அதிகரிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. தாம்பத்தியம் வைத்துக் கொண்ட பின்பு உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மற்றும் மனது இலகுவாகிறது.

இதனால் உங்கள் உடல்சோர்வும், மன சோர்வும் விலகும். அதிலும் நீங்கள் காலை வேளைகளில், உங்களது கடுமையான நாட்களில், உடற்பயிற்சி செய்த பின்னர், நீங்கள் மனஇறுக்கமாக உணரும் போது போன்ற சில தருணங்களில் நீங்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளும்போது நீங்கள் புத்துணர்ச்சி அடைகிறீர்கள். இதனால் உங்களது மனநிலை நல்ல மாற்றம் அடையும். இதுபோல சில தருணங்களில் நீங்கள் தாம்பத்தியம் மேற்கொள்வது உங்கள் நலத்திற்கு நல்லது.



நீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமான நாட்களாக கருதும் நேரங்களில் தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படுத்தும். நீங்கள் அலுவலக வேலையாக ஏதேனும் முக்கிய சந்திப்புகளுக்கு போகும் முன்னர் அல்லது நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால் முக்கிய போட்டிகளில் பங்குபெறும் முன்னர் தாம்பத்தியம் கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும், மனஅழுத்தத்தை குறைக்கும். எனவே, நீங்கள் நல்லமுறையில் செயல்பட தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உதவும்.

காலை பொழுதுகளில் நீங்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்தக் கொதிப்பு குறைகிறது மற்றும் மனஅழுத்தம் நீங்குகிறது என ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்.

தாம்பத்தியம் வைத்துக்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, சாதாரண காய்ச்சல், சளி போன்ற சாதாரண நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.

பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20 % பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நன்கு சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.

ஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளி வர தாம்பத்தியம் வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது.

சில தருணங்களில் ஏதேனும் சில காரணங்களுக்காக நீங்கள் அச்சப்படநேரிடும். அதுபோன்ற உணர்வுகளில் இருந்து எளிதாக வெளி வரவேண்டும் எனில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சரியான தீர்வு என கூறப்படுகிறது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker