ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்புதியவைமருத்துவம்

பருக்களில் சீழ் தொற்றுக்கள் அதிகரிக்காமல் சருமத்தை மீட்க என்ன செய்வது…

​முகப்பருக்கள் வருவது இயல்புதான் ஆனால் அதை கசக்கவோ, அழுத்தவோ செய்யும் போது அது தொற்று உண்டு செய்யலாம். தோலில் இயற்கையாக இருக்கும் பாக்டீரியாக்கள் துளைக்குள் நுழைந்து தொற்றுநோயை உண்டு செய்யலாம். இதனால் பருவை சுற்றியுள்ள பகுதி மிகவும் புண், சிவப்பு அல்லது வீக்கமாக இருக்கலாம். காய்ச்சலும் வரலாம். சமயங்களில் பாக்டீரியாவை கொல்ல பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படலாம்.

தொற்று மிகுந்த முகப்பரு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இளம்வயதினரிடையே இது பொதுவாக உள்ளது. பரு எந்த வயதிலும் வரலாம். சிலருக்கு சிஸ்டிக் முகப்பரு மற்றும் முடிச்சு முகப்பரு எனப்படும் கடுமையான வகை முகப்பரு உள்ளவர்களுக்கு இந்நிலை ஏற்படும். இது வலிமிகுந்த கட்டிகள், குருட்டு பருக்கள் என தோலுக்கு கீழே ஆழமாக உருவாகலாம். இது தோலின் மேற்பரப்பில் பருக்களாக தோன்றலாம்.

சருமத்துளைகள் அடைக்கப்படும் போது பருக்கள் உருவாகின்றன. இது தோலில் சிறிய துளைகள் உண்டு செய்யலாம். இறந்த சரும செல்கள், முடி, பாக்டீரியா மற்றும் சருமம் துளைகளை தடுக்கலாம். எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் தோலின் கீழ் சிக்கினால் பருக்கள் உருவாகலாம். சருமத்தில் இயற்கையாகவே பாக்டீரியாக்கள் பல உண்டு. இவை தோலுக்கு கீழ் வந்தால் தொற்று ஏற்படலாம். இதை கசக்கும் போது தோலில் இடைவெளியை உருவாக்கி பாக்டீரியாவை உள்ளே நுழைய அனுமதித்து தொற்று உண்டு செய்கிறது.

வழக்கமான பருக்களை விட பெரிய அல்லது வெளிப்படையான கறை
காய்ச்சல் அல்லது சோர்வு
கசிவு அல்லது சீழ்
இரத்தப்போக்கு
பரு மற்றும் அதைச்சுற்றி வலி அல்லது அசெளகரியம்
வலி கடுமையாக இருக்கலாம்.
அந்த பகுதியில் வீக்கம் அல்லது சிவத்தல்
பரு தொடுவதற்கு சூடாக இருக்கும்
முகப்பரு மறைந்தாலும் தழும்புகள் அப்படியே இருக்கும்

இலேசான பாதிப்பு எனில் வீட்டிலேயே சிகிச்சை செய்யலாம். பாதிக்கப்பட்ட பருக்களை கிள்ளவோ அல்லது வடிகட்டவோ செய்யாதீர்கள். அப்படி செய்வதால் அது மோசமாகலாம். தொற்று அதிகரிக்கலாம்.

பருக்கள் இருக்கும் பகுதியை சுத்தம் செய்வது நல்லது. ஒரு மென்மையான முகம் சுத்தப்படுத்தியை தவறாமல் பயன்படுத்துவது நல்லது. பருவை நேரடியாக கைகளில் தொட வேண்டாம்.

பருக்கள் மீது சூடான சுருக்கங்கள் வைப்பது உதவும். சூடான வெந்நீரில் துணியை நனைத்து 10 நிமிடங்கள் பருக்களின் மீதுவைத்து எடுக்கவும். நாள் ஒன்றுக்கு பல முறை மெதுவாக வைக்கவும். துணி சூடாக இருக்க கூடாது. இது சீழ் கரைத்து வெளியேற்ற உதவும்.

மேற்பரப்பில் பென்சாயில் பெராக்ஸைடு பொருள்கள் பயன்படுத்தலாம் இது பாக்டீரியாவை கொல்லும். இந்த க்ரீம் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். அதிக வலி இருந்தால் கண்களுக்கு அருகில் பருக்கள் கட்டியை உண்டு செய்தால் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

பருக்களை தடுக்க சருமத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
தலையணை உறைகள் மற்றும் துண்டுகள் தவறாமல் மாற்றுங்கள்
சுத்தமான ஒப்பனை பொருள்கள் சருமத்துக்கு பயன்படுத்துவது நல்லது. மேக் அப் சாதனங்களில் தூரிகைகளை ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்த வேண்டாம். உரிய காலத்தில் அதை மாற்றிவிடுங்கள்.
பருக்கள் வந்தால் அதை கிள்ளவோ, அழுத்தவோ செய்ய வேண்டாம். இது பாக்டீரியா உள்ளே நுழைவதை அனுமதிக்கும். பருக்களை உதிர செய்ய வேண்டாம்.
தோல் பொருள்களிலிருந்து விலகி இருங்கள். பாதிக்கப்பட்ட பரு குணமாகும் போது அதன் மீது லோஷன் க்ரீம் வகைகள் தவிருங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker