திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகிற பொழுது, மனம் அதை விட்டு வெளியே தள்ளி இருக்கச் சொல்லும். அந்த சமயங்களில் கிடைக்கும் அரவணைப்பு காதலாக மாற வாய்ப்புண்டு. அப்படி திருமணத்துக்கு பின் ஏற்படுகின்ற தகாத உறவில் இருந்து எப்படி வெளியேறலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
சிலர் திருமணத்திற்குப் பின்பு தகாத உறவைத் தெரிந்தோ தெரியாமலோ வைத்துக் கொள்வார்கள். சிலசமயம் அதுவாகவே சூழ்நிலைகள் காரணமாக அமைந்துவிடும். திருமணமான பின்பு நம் துணைக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் இது போன்ற உறவுகள் அமைந்து விடுகிறது.உணர்வுகளைப் பலசமயம் நம்மால் கட்டுப்படுத்த இயலவில்லை.வீட்டில் இருக்கும் சிறிய பிரச்சினைகளினால் மனது சோர்வடைந்து இருக்கும் போது வெளியே கிடைக்கும் ஒருசில சந்தோஷத்தில் ஆள் மனசு அலைபாய்கிறது.
இது போன்ற சமயங்களில் சில உறவுகள் கிடைக்கிறது. காலப்போக்கில் அது தகாது உறவாக மாறுகிறது. ஆரம்பக் காலத்தில் இது சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் போகப்போக இதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளே ஜாஸ்தி. சில சமயம் தங்களுடைய திருமண வாழ்க்கை முறிந்து போகும் நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள் ஒரு சிலர் இன்னும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.