சமையல் குறிப்புகள்புதியவை
மாலை நேரத்தில் சாப்பிட அருமையான தயிர் வடை
தேவையான பொருட்கள்
- உளுந்தம் பருப்பு – 1 கப்
- சர்க்கரை – 1 தேக்கரண்டி தூள்
- தயிர் – 250 கிராம்
- மிளகாய் பொடி – தேவையான அளவு
- வறுத்த சீரகம் பொடி – தேவையான அளவு
- கருப்பு உப்பு – தேவையான அளவு
- சீரகம் – தேவையான அளவு
- பெருங்காயம் – தேவையான அளவு
- கிஸ்மிஸ் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கிரீன் சட்னி – 1/2 கப்
- சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் – தேவையான அளவு
- புளி சட்னி – 1/2 தேக்கரண்டி
செய்முறை
- உளுந்தம் பருப்பை கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து வைத்து கொள்ளவும்
- தயிரில் கட்டிகள் இல்லாதபடி நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் சிறிது உப்பு, மற்றும் சர்க்கரை தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அப்பொழுது தான் வடை பஞ்சு போல் நன்றாக வரும். பிறகு அதில் சீரகம் சேர்த்து கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒருபுறம் வைக்கவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- சுட்டு எடுத்த வடையை பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரில் நனைக்கவும். இப்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வடையை 5-10 நிமிடங்கள் ஊற விடவும்.
- பத்து நிமிடம் கழித்து வடையை தண்ணீரில் இருந்து எடுத்து பிழிந்து வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- பிறகு அதில் தயிர், கருப்பு உப்பு, சீரகம் பொடி, சிவப்பு மிளகாய் தூள், கிரீன் சட்னி, புளி சட்னி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து பரிமாறவும்.
- மேலே காராபூந்தி அல்லது ஓமப்பொடி சேர்த்தும் பரிமாறலாம்.