அழகு..அழகு..புதியவை

ஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்

வெயில் காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு முகம் மிகவும் வறண்டு காணப்படும். இதனை குணப்படுத்த அரை வெள்ளரிக்காயை எடுத்து கொண்டு நன்கு அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசவும். இதனை வாரத்திற்கு 2 முறை இரவில் செய்து காலையில் முகம் கழுவினால் வறண்ட சருமம் புத்துணர்வுடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.

இன்று பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் முக பிரச்சினைகளில் முதன்மையானது இந்த முகப்பருக்கள்தான். இவற்றை போக்க 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் யோகர்ட், பொடி செய்த ஆரஞ்ச் தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலனை பெறலாம்.



வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும். வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள்.



பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.

அடுத்து சாக்ஸ்… சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள். தொப்பி, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.



அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலெட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும். ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கிரீம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதீங்க.. முகத்தில் கீழிருந்து மேலாக வட்ட வடிவில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.

வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker