அழகு..அழகு..புதியவை

சூப்பர் டிப்ஸ்! இந்திரலோகத்து அழகிகளை போல ஜொலிக்கனுமா? இந்த ஒரு இயற்கை பொருள் போதும்…

எந்த ஒரு அழகு குறிப்பாக இருந்தாலும் அது இயற்கை பொருட்களை வைத்து தயாரித்தால் தான் அதன் பலன் அதிகமாக இருக்கும். மேலும், எந்தவித பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது. எளிய பொருட்களை வைத்தே முகப்பருக்கள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை போக்குவதே சிறந்த ஒன்று.



அதுவும் நமது சமையல் அறையில் உள்ள பொருட்கள். இது காய்கறியாகவோ, பழமாகவோ, மசாலா பொருளாகவோ கூட இருக்கலாம்.

கடல் உப்பு இயற்கை அன்னை கொடுத்த வரம் அதனை வைத்து முகத்தினை அழகு படுத்தலாம். தமிழ் பெண்களே நீங்கள் தொடர்ந்து செய்தால் இந்திரலோகத்து பெண்களை போல ஜொலிக்கலாம்.

கடல் உப்பு
முகத்தை உப்பை கொண்டு கூட அழகாக மாற்ற முடியும்.

இதற்கு தேவையானவை…
உப்பு 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் சிறிது

செய்முறை
உப்புடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும்.

20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழிவி விடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகம் பளபளவென மாறும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker