சமையல் குறிப்புகள்
கேழ்வரகு அவல் உப்புமா
தேவையான பொருட்கள் :
- கேழ்வரகு அவல் – ஒரு கப்
- வெங்காயம் – ஒன்று
- கடுகு – அரை டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
- எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- கேழ்வரகு அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும்.
- இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
- சூப்பரான சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி.