சமையல் குறிப்புகள்

புத்துணர்ச்சி தரும் கேரட் பீன்ஸ் சூப்

குழந்தைகள் காய்கறி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம். கேரட். பீன்ஸ் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணெய் – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
  • கேரட் – 1
  • பீன்ஸ் – 3
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • மிளகு தூள் – தேவைக்கு
  • உப்பு – தேவையான அளவு
  • கார்ன் சிப்ஸ் – தேவைக்கு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  • கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 1 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவை போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, காய்கறிகளை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு காய்கறிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கிளறி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • அடுத்து அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையை ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
  • கடைசியாக மிளகு தூள், கொத்தமல்லி, கார்ன் சிப்ஸ் சேர்த்து கலந்து பரிமாறவும்.
  • சுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி!!!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker