சமையல் குறிப்புகள்

வயிறு பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

வாயு தொல்லை, சளி, இருமல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த சூப் நல்லது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • கற்பூரவல்லி இலை – 15,
  • ஓமம் – 2 டீஸ்பூன்,
  • சீரகம் – 2 டீஸ்பூன்,
  • தனியா – 2 டீஸ்பூன்,
  • மிளகு – 4 எண்ணிக்கை,
  • சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
  • இஞ்சி – 1 துண்டு,
  • பூண்டு – 4 பல்,
  • சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),
  • உப்பு – தேவைக்கு,
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
  • வெற்றிலை – 4,
  • நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை

  • கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
  • கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
  • மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • சூப் நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.
  • சத்தான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker