நீங்கள் ஒரு உறவில் இருக்கும் போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பொதுவாக உங்க உறவில் மரியாதை, காதல் இல்லாமல் இருப்பது மற்றும் சுய நலம் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்க உறவை விட்டு வெளியேற நீங்கள் முற்படலாம். உறவை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.
காதல் ஒரு அழகான விவரிக்க முடியாத உணர்வு தான். நாம் விரும்பும் ஒருவரை மெதுவாக காதலிக்கத் தொடங்க ஆரம்பித்து விடுவோம். அது உங்களுக்கு ஆரோக்கியமாகவும் ஆறுதலாகவும் முதலில் இருக்கும். ஒருவரின் செயல்களை அல்லது கருத்துக்களை நீங்கள் பாராட்டும்போது, நீங்கள் அவர்களை சிறிது விரும்பத் தொடங்குகிறீர்கள், காலப்போக்கில், உங்கள் உணர்வுகள் வளரத் தொடங்குகின்றன. ஆனால் அந்த நபரின் வேறு பக்கத்தை நீங்கள் அறிந்திருப்பதில்லை. இது காலப்போக்கில் ஒரு நச்சு உறவுக்கு வழி வகுக்கிறது. எனவே நீங்கள் உடனடியாக தவிர்க்க வேண்டிய 5 உறவுகளைப் பற்றி தான் நாம் இங்கே காணப் போகிறோம்.
உணர்ச்சி ரீதியாக இருப்பது
முதலில் உங்களுக்கு உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் பின்னர் கடுமையான கோபப் பிரச்சினைகள், பழி-விளையாட்டை விளையாடுவது அல்லது சுய-பரிதாபத்தில் கரைப்பது போன்ற அறிகுறிகளைக் கவனிக்கத் தொடங்கினால் அந்த வகை உறவில் கவனமாக இருங்கள். அவர்கள் உங்களை உணர்ச்சி பூர்வமாக பிளாக் மெயில் பண்ணலாம். நீங்கள் உறவை விட்டு வெளியேற விரும்பினால் அவர்கள் நீங்கள் இல்லாமல் வாழ முடியாது என்று கூறலாம். எனவே அந்த மாதிரியான உறவு உங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
நடத்தை வேறு விதமாக இருப்பது
அவர்கள் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். ,ஆனால் அதே நேரத்தில் அவர்களின் செயல்கள் வேறு விதமாக இருக்கும். உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதைக் கூட அவர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். மேலும் உங்க துணை தங்கள் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பது, உங்களை கவனிக்காமல் இருப்பது போன்றவை அவர்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதை காட்டுகிறது.
சுயநலமாக இருப்பது
உங்க துணை உங்களை ஒரு போதும் புரிந்து கொள்ள வில்லை என்றால் அவர்கள் எப்போதுமே சுய நலத்தை மட்டுமே பார்த்தால் உங்களுக்கு எதிர்மறையான திருப்பத்தை ஏற்படுத்தும். இதனால் உங்க இருவருக்கிடையே திருப்தியற்ற ஒரு உறவு தோன்றும். எனவே உறவில் கொடுத்து கொண்டே இருப்பீர்கள் திரும்ப எதுவும் கிடைக்காது.
அவர்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்
அவர்கள் செய்த தவறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் செய்த தவறை ஏற்றுக் கொள்ளாத நபருடன் வாழ்வது உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கும். இதனால் உங்க ஆற்றலையும் பொறுமையையும் நீங்கள் இழக்க நேரிடலாம். இதுவே உங்களை உறவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தும்.
உணர்ச்சிவசப்படுவது
உறவில் சொற்கள் ஆயிரம் உணர்ச்சிகளை குறிக்கின்றன. உங்க துணை அதை வெளிப்படுத்த முயன்றால் உணர்ச்சி ரீதியாக அது தொலைதூர உறவுக்கு வழி வகுக்கும். சிலர் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள் , தகவல்தொடர்பு இல்லாதவர்கள் மற்றும் எந்தவிதமான பச்சாதாபமும் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் மன நிலையை அழிக்கக்கூடும். ஏனென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக தகவல் தொடர்பு முக்கியமானது. உங்க துணையிடம் இந்த அறிகுறிகளை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால் உங்க உறவை விட்டு வெளியேறுவதில் குற்ற உணர்ச்சியில் மூழ்காதீர்கள். உங்க துணை உங்களை சரியாக நடத்தாவிட்டால் அதிலிருந்து வெளியேறுவதில் தப்பில்லை.