ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு

பெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு

* கண் எரிச்சல்,
* கண்ணில் உறுத்துதல்,
* கண் இமைகள் கனத்து இருத்தல்,

* கண்களில் சோர்வு,

* கண் சிவத்தல்,
* கண் வலி,
* அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல்,
* கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர்.

இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும்,






* லென்ஸ் அணிபவர்கள்,
* ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை,
* சர்க்கரை நோய்,
* தைராய்டு குறைபாடு,
* வைட்டமின் ஏ சத்து குறைபாடு,
* சில வகை மருந்துகள்,
* முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் போன்ற இவற்றினை உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றவைகளும் வறண்ட கண் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

இதனை முறையாக மருத்துவம் மூலம் கவனிக்காவிட்டால் கண்ணில் புண், கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படும்.  வெது வெதுப்பான வெந்நீர் ஓத்தடம் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

* அதிக நேரம் கம்ப்யூட்டர், படிப்பு என்று இருப்பவர்கள் கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.
* கண் சொட்டு மருந்துகளும் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
* தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
* காபி, டீ இவற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
* வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கறுப்பு கண்ணாடி அணிய வேண்டும்.
* புகை பிடிப்பதனை நிறுத்துங்கள்.
* புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்காதீர்கள்.
* கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.
* கண்களை சிமிட்ட பழகுங்கள். (அதாவது ஒன்றினை உற்று பார்க்காமல் கண்களை மூடி, திறக்க பழகுங்கள்).
* கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.






(ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை படைப்பின் வித்தியாசங்களை நாம் அறிவோம்). ஆனால் ஆண், பெண் தூக்கம் முறையிலும் படைப்பின் வித்தியாசத்தினால் சில தாக்குதல்கள் இருக்கின்றன. இதனை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதன் காரணம் அவர்களுள் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் அவைகூறுவது ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.

* பெண்கள் அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய அதிகம் மூளையை உபயோகிக்கின்றனர். அநேகமாக இவ்வாறு பகல் பொழுதில் அவர்கள் வேலை செய்வதால் இரவில் அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டியது அவசியமாகின்றது என்பது ஆய்வுகளின் முடிவு.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான அளவு தூக்கம் இருப்பதில்லை. இது அவர்களுக்கு குறைந்த சக்தியினை அளித்து விடுகின்றது. இக்காலங்களில் இவர்கள் பகலில் 20-30 நிமிடங்கள் வரை (ழிணீஜீ) எனப்படும் ஓய்வினை எடுக்க வேண்டும். இரவும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே தூங்கச் செல்ல வேண்டும்.






* மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக அதிக மறதி அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவேதான் முந்தைய காலங்களில் இக்காலங்களில் அவர்களை வீட்டு வேலைகள் செய்ய விடாமல் ஓய்வு கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் அதன் உண்மையான பொருளை ஆராயாமல்-அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவர்களை மேலும் பலவீனமாக்கி விட்டது அறியாமையே.

* ஆபீஸ், குடும்பம் என விடாது வேலை செய்வது அவர்களை மிகவும் சோர்வானவர்கள் ஆக்கி விடுகின்றதாம். எனவே அவர்களுக்கு கூடுதல் ஓய்வும், தூக்கமும் தேவைப்படுகின்றது என்பதனை அறிவோமாக.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker