தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளின் பார்வைத்திறனை சோதிப்பது எப்படி?

ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் பார்வை விஷயத்தில் மிகவும் அக்கறையுடன் இருந்தால் பார்வை இழந்த குழந்தைகளுக்கு மீண்டும் பார்வையை கொடுக்க முடியும்.

ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் பார்வை விஷயத்தில் மிகவும் அக்கறையுடன் இருந்தால் பார்வை இழந்த குழந்தைகளுக்கு மிகவும் இலகுவாக மீண்டும் பார்வையை கொடுக்க முடியும். குழந்தை பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாததிற்குப் பின்னர் அதன் பார்வையை ஒரு தாயால் பரிசோதிக்க முடியும்.

 

 

 

உங்கள் குழந்தை உங்கள் முகத்தைப் பார்த்து சிரிக்கின்ற அதே வேளை ஏதாவது வெளிச்சத்தைக் காட்டும் போது அதனை நோக்கிப் பார்க்கின்றதா? என்பது தான் முதல் பரிசோதனை.

அத்துடன் ஒரு பொருளை சத்தம் செய்யாமல் அதன் கண்களில் தெரியும் படி காட்டி, குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி கொண்டு செல்லும்போது அப்பொருளை நீங்கள் காட்டும் திசையை நோக்கி திரும்பி பார்க்கின்றதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏன் பொருளை சத்தம் செய்யாமல் காட்ட வேண்டும் என்றால், சிலவேளைகளில் சத்தத்தினை செவிமடுத்து சத்தம் வருகின்ற திசையை நோக்கி கூட அது பார்க்கலாம், அதனை கொண்டு நாம் குழந்தையின் பார்வை சரியாக இருக்கின்றது என்ற தீர்மானத்திற்கு வர முடியாது.

 

 

 

இது குழந்தை பிறந்து சுமார் இரண்டு மாதத்திற்குப் பின்னர் நீங்கள் அவர்களின் பார்வை தொடர்பாக செய்ய வேண்டிய சோதனைகள். இச்சோதனைகளை செய்யும்போது குழந்தைகளின் பார்வையில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கண் வைத்தியரை நாடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker