சமையல் குறிப்புகள்புதியவை

கிராமத்து ஸ்டைல் வெந்தய குழம்பு

சூடான சாதத்தில் வெந்தய குழம்பை ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று கிராமத்து ஸ்டைலில் வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சுண்டைக்காய் வற்றல் – 3 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 15,
தனியா – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 8,
வெந்தயம் – 3 டீஸ்பூன்,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
பெரிய தக்காளி – 1,
நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
பெரிய தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது),
வெல்லம் – சிறிது,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

இத்துடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை நன்றாகக் குழைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து அதில் உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

சுவையான வெந்தயகுழம்பு தயார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker