புதியவைமருத்துவம்

தீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக் குறிப்புகள்

* ஒரு மேசைக்கரண்டி சின்னச் சீரகத்தை நன்றாக அவித்து பின் ஒரு மேசைக்கரண்டி பனங் கல்லக்காரத்துடன் சேர்த்து ஒரு நாளுக்கு இரு தடவை குடிக்கவும். நெஞ்சில் உள்ள சளி நன்றாக பழுத்து வெளியே வந்துவிடும்.

* ஒரு கரண்டி தேங்காய் எண்ணையை நெருப்பில் சூடாக்கி அதனுடன் கொஞ்சம் கற்பூரத்தை பொடிசெய்து கலந்து நெஞ்சிலும் முதுகிலுள்ள விலாப்பகுதியிலும் மற்றும் உள்ளங்கால்களிலும் நன்றாக தேய்த்துக்கொள்ளவும். நாலு வெற்றிலையை நெருப்பில் வாட்டி அதன் மீது நீங்கள் தயாரித்த கற்பூரம் + தேங்காய் எண்ணெய் தைலத்தையும் தடவி நெஞ்சின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் போட்டுக்கொண்டு இரவு தூங்கிப் பாருங்கள். இருமல் குறைந்துவிடும்.

* சின்ன வெங்காயத்தை நன்றாக வெட்டி பனம் கல்லக்காரத்துடன் கலந்து ஊறவிட்டு மறுநாள் அதனை நன்றாக மென்று சாப்பிட்டுப் பாருங்கள். வரட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்.

* Oregano Oil ஒரு கரண்டி எடுத்து நன்றாக அண்ணாந்துகொண்டு அடித்தொண்டையில் விட்டு விழுங்கிப் பாருங்கள். இருமல் குறைந்துவிடும்.

* குத்தரிசியை மூட்டைகட்டி தலையணைக்குப் பதிலாக வைத்துக்கொண்டு இருவு உறங்கிப் பாருங்கள் தலையில் பிடித்திருந்த நீர் எல்லாம் சீக்கிரம் இறங்கிவிடும்



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker