தூக்கம் வருவதை தடுக்கும் உணவுகள்

* கிரீன் டீயில் தியோபுரோமின், தியோபைலின் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. அவை இதய துடிப்பை அதிகரிக்கச் செய்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதனால் மாலை 4 மணிக்கு பிறகு கிரீன் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
* சாக்லேட்டில் இடம்பிடித்திருக்கும் காபைன் ஆழ்ந்த தூக்கத்திற்கு அணை போட்டுவிடும். சர்க்கரை கலந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் இரவில் தவிர்க்க வேண்டும். அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி தூக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும்.
* இரவில் காரமான உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு தயாராவதற்கு ஏதுவாக உடல் வெப்பநிலை குறைய தொடங்கும். அந்த நேரத்தில் கார உணவுகளை சாப்பிட்டால் அது உடல் வெப்பநிலையை அதிகப்படுத்திவிடும். அதன் தாக்கமாக ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் ஒத்துழைக்காது.
* இரவு நேரங்களில் தக்காளி சாஸ் மற்றும் ரசாயனங்கள் கலந்த பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். அதிலிருக்கும் அமிலத்தன்மை நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
* இறைச்சி, எண்ணெயில் பொரித்த உணவுகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டும். அவை செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். தூக்கத்தை கெடுக்கும்.



