உலக நடப்புகள்புதியவை

பிள்ளைகளின் கல்வி அறிவை பகிர்ந்துகொள்ள பிரத்யேக ஆப்ஸ்

ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கல்வி சம்பந்தப்பட்ட புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. ‘கே-சேது’ என்ற பெயரில், முழுக்க முழுக்க தமிழக பள்ளி-கல்லூரி மாணவர்களை மையப்படுத்தியே இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிண்டர் கார்டன் கல்வி தொடங்கி, கல்லூரி படிப்பு வரை கல்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இதில் மாணவர்கள் பகிரலாம். பகிரப்படும் விஷயங்களை மற்ற மாணவர்கள் பார்த்து பயிலலாம். இதை ‘வீ எக்ஸ்போ இந்தியா’ என்ற கல்வி அமைப்பு உருவாக்கி உள்ளது.

“இது கொரோனா லாக்-டவுனில் உரு வான யோசனை. ‘வீ எக்ஸ்போ இந்தியா’ சார்பில் கல்வி சம்பந்தமான பல முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறோம். 2020-ம் ஆண்டில், பள்ளி-கல்வி மாணவர்களையும், கல்வியாளர்களையும் ஒரு நிகழ்வின் மூலம் ஒன்றிணைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கினால் அது நிகழாமல் போனது. அதற்கு மாற்றாகவே, இந்த ‘கே-சேது’ அப்ளிகேஷனை உருவாக்கினோம். இதில் மாணவர்களும், அனுபவமிக்க கல்வியாளர்களும் சந்திக்கமுடியும். பயில்பவர்களும், பயிற்சியாளர்களும் கருத்துகளை பரிமாறவே, இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க 500-கும் மேற்பட்ட பள்ளிகளுடனும், பிரபல யூ-டியூப் கல்வியாளர்களுடனும் ஒன்றிணைந்து இந்த அப்ளிகேஷன் முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். அனுபவமிக்க ஆசிரியர்கள், பிரபல யூ-டியூப் கல்வியாளர்கள், நன்றாக படிக்கும் மாணவர்கள் என பலரும் கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதனால் கடினமான கணக்கு சூத்திரங்கள், புரியாத அறிவியல் கோட்பாடுகள், புதிரான பாடத்திட்டங்களை எல்லாம் இனி அனுபவமிக்க கல்வியாளர்கள் தங்களுடைய பதிவின்மூலம் விளக்க உள்ளனர். இதுமட்டுமின்றி சுலபமான விஷயங்களும் இதில் பகிரப்படும்” என்கிறார், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் ராஜ்குமார். மேலும் தொடர்ந்தவர்….

“கல்வி அறிவை வளர்ப்பதோடு, எல்லா மாணவர்களுக்கும் தேவையான கல்வி நிதி உதவிகளையும், இந்த ஆப்பில் பெற முடியும். ‘பிக் பேங்க் ஸ்காலர்ஷிப்’ என்ற பெயரில் கல்வி உதவி வசதி, இந்த ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்களோடு கைகோர்த்திருக்கும் கல்லூரி நிறுவனங்கள், இந்த ஆப்பில் இணைந்திருக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளனர்.

மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரி கட்டணத்தில் சலுகைகளை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளே வழங்க உள்ளனர். அதற்கு அதீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. சராசரி மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கேற்ப கல்வி கட்டண சலுகை வழங்கப்படும். குடும்ப பின்னணி, மாணவர்களின் கல்வி ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் நிகழ்வுகள் டிசம்பர் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அதனால் கே-சேது ஆப், தமிழக மாணவர்களுக்கு பலவழிகளில் உதவ இருக்கிறது. கூடவே உயர்கல்வி பற்றிய வழிகாட்டுதலையும் வழங்க இருக்கிறது.” என்றார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker