இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற அட்டகாசமான வடகறி செய்வது எப்படி.? ரெசிபி இங்கே

பெரும்பாலான மக்கள் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு வடகறி வைத்து சாப்பிடுவது தான் வழக்கம். மேலும் பல உணவகங்களிலும் இது கிடைக்கும்.
பெரும்பாலான மக்கள் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு வடகறி வைத்து சாப்பிடுவது தான் வழக்கம். மேலும் பல உணவகங்களிலும் இது கிடைக்கும். ஆனால் சென்னை தவிர வேறு ஊர்களில் உள்ள மக்களுக்கு இதை பற்றி பெரும்பாலும் தெரிவதில்லை.
ஆனால் இங்கே நாங்கள் உங்கள் வீட்டிலேயே சுவையான சென்னை ஸ்டைல் வடகறி செய்யலாம் என்று இங்கே சொல்லப்போகிறோம். வாங்க எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்…
தேவையான பொருட்கள் :
- கடலைப் பருப்பு – 1 கப்
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 2
- முந்திரி – 2
- மஞ்சள் – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
- சோம்பு – 1 ஸ்பூன்
- பட்டை – 1
- லவங்கம் – 1
- கிராம்பு – 1
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து இதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
குழம்பு கொதித்ததும் வேக வைத்த கடலை பருப்பை சேர்த்துக் கிளறி அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து சமைக்கவும்.
எண்ணெய் பிரிந்து தேவையான பதத்திற்கு வந்ததும் குழம்பை இறக்கி நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான வடகறி இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ரெடி…



