சமையல் குறிப்புகள்புதியவை

1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா.. இப்படி குழம்பு செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்..

உங்கள் வீட்டில் சமைக்க காய்கறி இல்லையா? வீட்டில் வெறும் கறிவேப்பிலை மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் 1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் குழம்பு செய்யுங்கள். இந்த கறிவேப்பிலை குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு சத்தானதும் கூட. அதோடு இந்த குழம்பு செய்தால், பூண்டு குழம்பு போல் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு கறிவேப்பிலை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
* மிளகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கையளவு
* தக்காளி – 1

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 15
* பூண்டு – 10 பல்
* அரைத்த விழுது
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* புளி – 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் 1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை சேர்த்து கிளறி விட வேண்டும். * பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து, குழம்பின் நிறம் மாறியதும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker