ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க.

சமீப காலமாக மாரடைப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். மாரடைப்பு என்பது இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பின் காரணமாக இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் தீவிரமான மருத்துவ நிலையே மாரடைப்பு. இது ஒரு தீவிரமான இதய நிலை. இந்த மாரடைப்பு ஏற்பட்டால், நெஞ்சு பகுதியில் தீவிரமான வலி ஏற்படுவதோடு, அது சில நிமிடங்கள் வரை நீடித்திருக்கலாம்.

இல்லாவிட்டால் நெஞ்சு வலியானது இடது கை, தோள்பட்டை, கழுத்து, தாடை அல்லது முதுகு பகுதி வரை பரவலாம். அதுமட்டுமின்றி சிலருக்கு மூச்சும் திணறல், குமட்டல், தலைச்சுற்றல், திடீர் மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவையும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சமீபத்தில் கூட நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் அவர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இப்படி அதிகரித்து வருமா மாரடைப்பு சம்பவங்களால் பலருக்கும் எங்கு நமக்கும் மாரடைப்பு வந்துவிடுமோ என்ற அச்சம் எழக்கூடும். ஆனால் மாரடைப்பு என்பது ஒரே நாளில் ஏற்படுவதில்லை. இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து, இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்க வேண்டும்.

அதற்கு உணவே மருந்து என்பதற்கு ஏற்ப, இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்? டாக்டர் பிள்ளை அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் இரத்தக்குழாய் அடைப்பைத் தடுக்கும் 5 காய்கறிகள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இரத்தக்குழாய்களில் உள்ள சிறுசிறு அடைப்பை தடைப்பதோடு, மேற்கொண்டு அடைப்பு வராமலும் தடுத்து, மாரடைப்பின் அபாயமும் குறையும். இப்போது அந்த காய்கறிகள் என்னவென்பதைக் காண்போம்.

1. தக்காளி

தக்காளியில் ஐசோபீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது இரத்தக்குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்பை நீக்குவதில் அல்லது கரைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இந்த தக்காளியை தினசரி சமையலில் ஏதாவது ஒரு வகையில் தவறாமல் சேர்த்து, மாரடைப்பின் அபாயத்தில் இருந்து விடுபடுங்கள் என்று டாக்டர் கூறினார்.

2. பீட்ரூட்

“பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலினுள் சென்று உடலை ரிலாக்ஸாக்கி இரத்த குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் போது, இரத்தக்குழாய்களில் சிறுசிறு அடைப்புகள் இருந்தாலும், அது இரத்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்து அகற்றிவிடும். முக்கியமாக ஆரம்ப கட்டத்தில் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்களை தேங்கவிடாமல் தடுக்கும். எனவே பீட்ரூட்டை அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள்” என்று டாக்டர் கூறினார்.

3. வெங்காயம்

“வெங்காயத்தில் ஒருவிதமான அமிலம் உள்ளது. இது இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மாரடைப்பைத் தடுக்கும். வெங்காயத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம். இரண்டுமே நல்லது தான். இருப்பினும் சின்ன வெங்காயம் இன்னமும் நல்லது. எனவே தினசரி சமையலில் வெங்காயத்தை தவறாமல் சேர்த்து வாருங்கள்” என்று டாக்டர் கூறினார்.

4. கேரட்

“கேரட்டில் பீட்டா கரோட்டீன் உள்ளது, இது முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ உள்ளது. இது கண்களுக்கு நல்லது. ஆனால் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளதால், அது இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை போக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மாரடைப்பில் இருந்து பக்கவாதத்தில் இருந்தும் தடுக்கிறது. முக்கியமாக கேரட்டை பச்சையாக கூட சாப்பிடலாம். தோலோடும் சாப்பிடலாம். ஆனால் நன்கு நீரில் கழுவிவிட்டு பின் சாப்பிடுங்கள்” என்று டாக்டர் கூறினார்.

5. கீரைகள்

கீரைகளில் அகத்திக்கீரை, பசலைக்கீரை, பாலக் கீரை, முருங்கைக்கீரை என பல வெரைட்டிகள் உள்ளன. இந்த கீரைகளில் நார்ச்சத்து, நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால், தேவையில்லாத கொழுப்புகள், படிவுகள் எல்லாவற்றையும் நீக்கி, அடைப்பு இல்லாமல் வாழ வைக்கிறது. மேலும் இது மலச்சிக்கலை தடுக்கிறது. இந்த கீரைகளை இரவு நேரத்தை விட பகல் வேளையில் அதிகம் சாப்பிடுங்கள். எனவே முடிந்தவரை அடிக்கடி கீரையை வாங்கி சமைத்து சாப்பிட்டு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று டாக்டர் கூறினார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker