உலக நடப்புகள்புதியவை

கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.!

கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.!

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் வரை இருப்பார்.

தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் ஜூன் 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனின் ராசிக்கு சுக்கிரன் செல்வது சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார்.

குரு பகவானின் உச்ச ராசியில், அதுவும் குரு பகவான் இருக்கும் போதே சுக்கிரன் செல்வதால், இருமடங்கு சக்தி பெற்று சுக்கிரன் இருப்பார். இந்த சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியின் போது 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வருமானத்திலும் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பானதாக இருக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜூன் 08 முதல் மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்த சொத்து கைக்கு வந்து சேரும்.

துலாம்

துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியின் போது 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker