இதுல உங்க கட்டைவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்..
இதுல உங்க கட்டைவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்..
நமது மூக்கு, காது, நெற்றி, புருவங்கள், கை கால் விரல்களின், நீளம், அமைப்பு போன்றவையும் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? அதுவும் ஒருவரது கட்டை விரலின் வடிவம் ஒருவரைப் பற்றி பல விஷயங்களை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?
எப்படி உள்ளங்கையில் உள்ள ரேகைகள் ஒருவரது எதிர்காலத்தை பற்றி வெளிப்படுத்துகிறதோ, அதேப் போல் கட்டைவிரல் வளையும் விதமும் ஒருவரது ஆளுமை, பலம், பலவீனம், உலகை பார்க்கும் விதம் போன்ற பல விஷயங்களை வெளிப்படுத்தும். இது நம்ப முடியாத வகையில் இருக்கலாம். ஆனால் நம் உடலைப் பற்றிய சிறிய விஷயங்கள் கூட நம்மைப் பற்றி சில விஷயங்களைத் தெரிவிக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது. கீழே இரண்டு விதமான கட்டை விரல் அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்களின் கட்டைவிரல் எப்படி உள்ளது என்பதை பார்த்து, உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
![]()
டைப் #1 உங்களின் கட்டை விரல் நேராக உள்ளதா? அப்படியானால் நீங்கள் தலைமை தாங்குவதற்காக பிறந்தவர்கள். வலுவான மன உறுதியைக் கொண்டவர். வாழ்க்கையில் எதையும் நிதானமாக அணுகுபவர். உங்களின் ஆளுமை ஆதிக்கம் செலுத்துவது போன்று இருக்கும். சூழ்நிலைகளையும், சுற்றியிருப்பவர்களையும் துல்லியமாக கவனித்து பகுப்பாய்வு செய்யும் திறனைக் கொண்டவர்.
நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பீர்கள். நடக்கவுள்ள ஆபத்தை முன்கூட்டியே உணரக்கூடிய வகையில் வலுவான உள்ளுணர்வைக் கொண்டவர்கள். நீங்கள் வெளிப்புறமாக ஒரு கடினமான ஒரு ஆளாக வெளிப்பட்டாலும், உண்மையில் நீங்கள் நிறைய அன்பும், பாசமும் கொண்டவர். உங்களின் மிகப்பெரிய பலம் என்றால், அது மன உறுதி, சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவை தான். என்ன தான் பாசமானவராக இருந்தாலும், உங்களை காயப்படுத்தியவரை முழுமையாக மன்னிக்காமல், ஓரளவே மன்னிப்பீர்கள்.
![]()
டைப் #2 உங்களின் கட்டைவிரல் வளைந்திருந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் உங்களின் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் நபரும் கூட. சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து நடந்து கொள்வீர்கள். அதிக கருணை உள்ளம் கொண்ட நபர். பெரும்பாலும் உங்கள் தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால், அது உங்களை மனதளவில் சோர்வடையச் செய்யவோ அல்லது காயப்படுத்தவோ கூடும். மற்றவர்களுடன் எளிதில் பழகக்கூடியவர். பேச்சால் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
படைப்பாற்றல் அதிகம் கொண்டவர். உங்களிடம் உள்ள துடிப்பான கற்பனைத்திறனும், வாழ்க்கையை அணுகும் பரந்த மனப்பான்மையும் உங்களை ஒரு இயல்பான கலைஞராக ஆக்குகிறது. இருந்தாலும், உங்கள் நெகிழ்வுத்தன்மை சில சமயங்களில் முடிவெடுக்க முடியாத நிலைக்கு வழிவகுக்கும். எல்லா வழிகளையும் ஒருமுறை ஆராய வேண்டும் என்ற உங்கள் ஆசையானது உங்களை முடக்கிவிட அனுமதிக்காதீர்கள். உள்ளுணர்வை நம்பி எதையும் செய்யுங்கள்.



