ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்!

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களின் தலை முடி மீது அதிக அக்கறை இருக்கும். ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைபளு, மன அழுத்தம், இரசாயன கூந்தல் பராமரிப்பு பொருட்கள், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, சூழல் மாசு போன்ற பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்வு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக பெண்கள் தங்களின் கூந்தலை நீளமாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், கூந்தலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதற்கு அதிக செலவில் சந்தைகளில் கிடைக்கும் இரசாயன கூந்தல் பராமரிப்பு பொருட்களை பாவித்து மேலும் பிரச்சினைகளை தேடிக்கொள்கின்றனர்.

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! | Mix These3 Things With Henna For Healthy Long Hair

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் இயற்கை முறையில் நமது சூழலில் இருந்தே பெற்றுக்கொள்ளக்கூடிய மருதாணியுடன் சில பொருட்களை சேர்து வீட்டிலேயே எவ்வாறு கூந்தல் உதிர்வு தீர்வு கொடுத்து அடர்த்தியான கூந்தலை பெறுவதென இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! | Mix These3 Things With Henna For Healthy Long Hair

உங்களின் தலைமுடி வறண்டு, மந்தமாக இருந்தால், நீங்கள் சீகைக்காய் பொடியைப் பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும். இது முடியை மென்மையாக மாற்ற உதவும் ஒரு இயற்கை கண்டிஷனர் ஆக செயற்படுகின்றது.

மருதாணியுடன் சீகைக்காய் பொடியைக் கலந்து தடவுவது முடியை கண்டிஷனிங் செய்து ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்ற பெரிதும் துணைப்புரியும்.

வேப்பிலை தூள் (Neem powder)

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! | Mix These3 Things With Henna For Healthy Long Hair

வேப்பிலைப் பொடியில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க பெரிதும் உதவும்.

வேப்பிலை பொடியை மருதாணியுடன் கலந்து தடவுவினால், முடி வேர்களை வலுப்படுத்தி, முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறுவதற்கு உதவுகின்றது. இது கூந்தலின் கருமையையும் அதிகரிக்க உதவும்.

நெல்லிக்காய் பொடி (gooseberry powder)

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! | Mix These3 Things With Henna For Healthy Long Hair

மாதுளையை விட நெல்லிக்காயில் 27 சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. அதாவது, நெல்லிக்காயில், ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன.

நமது முடிக்கு சரியான ஊட்டச்சத்தை நெல்லிக்காய் கொடுக்கிறது. பொடுகு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நெல்லிக்காய் பொடி தீர்வு கொடுக்கும்.

மருதாணியுடன் இவற்றைப் பயன்படுத்துவதால், தலைமுடிக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதன் பயன்பாட்டின் மூலம், முடி வலுவாகவும், மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற உதவும், முடி உதிர்தல் குறைந்து, முடி வளர்ச்சியும் அதிகரிப்பதையும் கண்கூடாக பார்க்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker