ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்புதியவை

முகத்திற்கு தினமும் ஒரு புது பொலிவு கொடுக்கும் கற்றாழை..இப்படி போடுங்க- தீர்வு நிச்சயம்.

பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு 30 வயதை தாண்டும் போதே முதுமை தோன்றி விடுகின்றது.

எடையிலும் அழகிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விடும்.

இவ்வாறு பிரச்சினையிருப்பவர்கள் இரசாயன பொருட்களை போட்டு முக அழகை மீண்டும் சுருக்கிக் கொள்ளாமல் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு நிரந்தர அழகை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் வீட்டில் கிடைக்கும் கற்றாழை ஜெல்லை குறிப்பிட்ட சில பொருட்களுடன் சேர்த்து தடவும் போது இந்த தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.

ஏனெனின் கற்றாழைக்கு தோல் சுருங்குவதை தள்ளி போடும் குணம் உள்ளது.

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
ஓட்ஸ் – ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் – அரைக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு பவுலில்கற்றாழை ஜெல், ஓட்ஸ், ஆலிவ் ஆயில் மூன்றையும் ஒன்றாக போட்டு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட்டு முகத்தை துடைக்கவும். முகத்திலுள்ள தண்ணீர் காய்ந்த பின்னர் கற்றாழை பேஸ்ட்டை தடவ வேண்டும்.
சரியாக 30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இப்படி தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை செய்தால் சருமம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
கற்றாழை ஜெல்லில் இருக்கும் பதார்த்தங்கள் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர வைக்கும். இதனால் முகத்திற்கு புது பொலிவு கிடைக்கின்றது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker