ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் அடிக்கடி புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் அறியாமை தான்.

புற்றுநோய் குறித்து பூரண விளக்கம் மக்களிடம் போதியளவு இல்லாத காரணத்தால் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த வகையில், புற்றுநோய் விளைவிக்கும் பொருட்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலை படிக்கும் போது ஒரு நிமிடம் என்னுடைய நெஞ்சு அடைத்து விட்டது. காரணம் அதில் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருட்கள் தான் இருந்தது.

இந்த பட்டியலின்படி புற்றுநோய் விளைவிக்கும் பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

1. கற்றாழை சாறு

உடல் சூடு காரணமாக அதனை குளிர்ச்சிப்படுத்துவதற்காக கற்றாழை சாறு மற்றும் கற்றாழை சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வோம். ஆனால் பட்டியலின் படி கற்றாழை சாறில் உள்ள சில கூறுகள், புற்றுநோயை விளைவிக்க வாய்ப்புள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. ஊறுகாய்

தினமும் சாப்பிடும் போது வீடுகளில் ஊறுக்காய் இல்லையென்றால் சிலர் சாப்பிடமாட்டார்கள். ஊறுக்காய் எலுமிச்சைப்பழம், மாங்காய் என புளிப்பான பழங்களை வைத்து செய்யப்படுகின்றது. மேலும் ஊறுகாய் அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக WHO குறிப்பிட்டுள்ளது.

3. செயற்கை இனிப்பூட்டிகள்

பெரிய பெரிய உணவகங்களில் டீ மற்றும் ஜீஸ் வகைகளுக்கு பயன்படுத்தும் செயற்கை இனிப்பூட்டியான Aspartame-ஆல் புற்றுநோய் ஏற்படுகின்றது. இதில் நாம் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

முக்கிய குறிப்பு

உணவு வகைகளை உட்பட காற்றுமாசு, தொடர் இரவு நேரப் பணி இவைகளாலும் புற்றுநோய் ஏற்படுகின்றது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker