கவிதைகள்புதியவை

என்னோடு நீ இருந்தால் – கவிதை

என்னோடு நீ இருந்தால் - கவிதை

கருவிழியாய் இருப்பாய் என்று நினைத்தேன் …
கண்ணீரைத் தந்து சென்றாய் …..
மூச்சாய் இருப்பாய் என்று நினைத்தேன்…..
சுவாசத்தை எடுத்து சென்றாய் ….
வார்த்தையாக மாறுவாய் என்று நினைத்தேன் ….
சொற்களை திருடிச் சென்றாய் …
உயிராக இருப்பாய் என்று நினைத்தேன் ….
இதயத் துடிப்பை நிறுத்திச் சென்றாய் …
காலம் முழுதும் வாழலாம் என்று நினைத்தேன் …
கானல் நீராய் காணமல் சென்றாய் …
ஏமாற்றமே என்றாலும் , இன்னும் எதிர்பார்த்து
நினைக்கிறேன் ,” என்னோடு நீ இருந்தால் ” ….😥

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker