அழகு..அழகு..புதியவை

சொட்டை விழுந்த இடத்தில் கூட கிடுகிடுன்னு முடி வளரணுமா? கிரீன் டீ 3 ஸ்பூன் போதும்!

30 வயதை தாண்டினாலே முடியுதிர்வு ஆரம்பித்து விடுகின்றது. அது நாளாடைவில் வழுக்கையாக மாறி விடுகின்றது.

இதற்கு விலையுயர்ந்த மருந்துகளை உபயோகிப்பதை தடுத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இதனை கட்டுப்படுத்த முடியும்.

முடி உதிர்வுக்கு கிரீன் டீ பெரிதும் உதவி புரிகின்றது. பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து கிரீன் டீயில் உள்ளது.

இது எடையிழைப்புக்கு மட்டுமன்றி உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து பிரச்சினைக்குமே சிறந்த தீர்வை தருகின்றது.

தற்போது கிரீன் டீ வைத்து வழுக்கை தலையில் முடியை எப்படி வளர வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  1. தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
  2. ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
  3. கிரீன் டீ 3 ஸ்பூன்

செய்முறை

முதலில் கிரீன் டீ உடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொள்ளவும்.

அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் தரவும்.

30 நிமிடத்திற்கு பிறகு தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker