வெள்ளை முடிக்கு இனிமே ஹேர் டை வேண்டாம்- தேங்காய் சிரட்டை இருந்தா போதும்
நரைமுடி இருந்தால் அது படிபடியாக குறைய தேங்காய் சிரட்டையில் எப்படி ஹேர் டை செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்போது இளவயதிலே நரைமுடி வருவத சாதாரணமாக இருக்கிறது. இதனால் பெரும் சிரமங்களுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.
இதற்காக பல இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்தும் போது அது நாளைடைவில் நம்முடியை ஆரோக்கியமற்றதாக மாற்றுவதுடன் பல பக்க விளைவுகளையும் கொண்டு வரும்.
இதற்காக தான் தேங்காய் சிரட்டையை வைத்து ஒரு சிறப்பான ஹேர் டையை உருவாக்கப்போகிறோம். இதற்கு தேங்காய் சிரட்டை வசம்பு விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் இருந்தால் போதும்.
முதலில், தேங்காய் சிரட்டையையும், வசம்பையும் தனித்தனியே கரி அளவிற்கு சுட்டு கொள்ளவும். பின்னர் இது இரண்டையும் சேர்த்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து கலந்து கொள்ளவும். பின்னர் அதில் பொடித்த கரியை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவை கருமை நிறத்தில் இருக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை முடி நரைத்த பகுதிகளில் நன்கு தடவினால் போதும். இதன் பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். அதன் பின்னர் நரைமுடியின் வெித்தியாசத்தை பார்க்கலாம்.