தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்பிணிப் பெண்கள் எவ்வளவு கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும்?

கர்ப்பிணிப் பெண்கள் எவ்வளவு கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும்?
கர்ப்ப காலத்தில் அவரவர் வயதிற்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளும் கால்சியம் அளவும் மாறும். இதனால், தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் ஆரோக்கியத்தோடு இருக்கலாம்.

19 முதல் 50 வயது வரை இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அளவை அவர்கள் குழந்தை பிறந்த பின்னரும் தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கால்சியம் கிடைக்கும். ஆக இந்தக் காரணத்தால் கால்சியம் சத்து எடுத்துக் கொள்ளுதல் கட்டாயப்படுத்தப்படுகின்றது.

நிறைய மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவை என்பதற்காக பல வகை வகையான மாத்திரைகளை உண்ண பரிந்துரைப்பார்கள். ஆனால் அவை நிச்சயம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் சில ஒவ்வாமையை காலப் போக்கில் ஏற்படுத்தி விடும். ஆனால், இயற்கையாகவே உங்கள் உணவில் ஒரு சில முக்கிய பொருட்களை சேர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலுக்குத் தேவையான கால்சியம் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு கிடைத்து விடும். அந்த வகையில், உங்களுக்காக, கர்ப்ப காலத்தில் கால்சியம் அளவை அதிகரிக்க நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள், பின் வருமாறு.

தினமும் சுமார் 400 மில்லி கிராம் தயிர்.
சுமார் 400 மில்லி கிராம் அளவு பழ வகைகள்.
300 மில்லி கிராம் கொழுப்பு நீக்கப்பட்ட பால்
200 மில்லி கிராம் சாத்துக்குடி பழச்சாறு
200 மில்லி கிராம் சால்மன் மீன் அல்லது கால்சியம் நிறைந்துள்ள மீன் வகைகள்
100 கிராம் சர்க்கரை பூசணிக்காய்

இவை மட்டுமல்லாது, உங்கள் உணவில் தினமும் கீரை, ப்ராக்கோலி, முளை கட்டிய பயிர் வகைகள் என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை பசும் பாலை அருந்துவது நல்லது. கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில், அதிகம் கொழுப்பு நிறைந்த பாலையும் தவிர்ப்பது நல்லது. பருப்பு கீரை, வெந்தயக் கீரை, சுறா மீன், போன்ற உணவு வகைகளை உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.இவை உங்களது உடலின் தினசரி கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யும்.

கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதனால் உடலில்
அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பை குறைகின்றது. கர்ப்ப காலத்தில் போதுமான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

கர்ப்பிணி பெண்கள் தேவையான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்த நோய் வராமல் காத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவ காலத்தில் தங்களது எலும்புகள் வலுவோடு இருக்க உதவும். இதனால் பிரசவ நேரத்தில் ஏற்படும் வலியையும் தாங்கிக் கொள்ளும் பலம் அவர்களுக்கு கிடைகின்றது.

கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது.
இதனால், குழந்தையின் இருதயம் ஆரோக்கியமாக செயல்படுகின்றது. அதனால், கால்சியம் உங்கள் உணவில் கட்டாயம் தினசரி உணவில் இருக்க
வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker