சமையல் குறிப்புகள்புதியவை

இனிப்பு அடை

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி மாவு – 1 கப்

* வெல்லம் – 1 கப்

* தண்ணீர் – 2 கப்

* பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 4 டேபிள் ஸ்பூன்

* காராமணி – 1 /4 கப்

* ஏலக்காய் – 1 (பொடித்து கொள்ளவும்)

செய்முறை:

* முதலில் காராமணியை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, விசில் விட்டு வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் மற்றும் வெல்லத்தைப் போட்டு, வெல்லத்தைக் கரைய வைக்க வேண்டும்.

* வெல்லம் நன்கு கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* பிறகு தீயை குறைத்துவிட்டு, அதில் அரிசி மாவை மெதுவாக கட்டிகள் சேராதவாறு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

* கலவையானது ஓரளவு குளிர்ந்ததும் கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது அந்த கலவையை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக தட்டி, நடுவே ஒரு ஓட்டை போட்டால், சுவையான இனிப்பு அடை தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker