ஆரோக்கியம்புதியவை

மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடற ஆளா நீங்க… அதனால் வரும் நன்மை என்ன? ஆபத்துக்கள் என்ன?

நாம் வீட்டில் எவ்வளவு நேரம் தான் தூங்கினாலும், அலுவலகத்தில் நமது டெஸ்க்கின் முன்பு சிறிதுநேரம் தூங்கினால் தான் பலருக்கு அன்றைய நாள் சிறப்பானதாகவே உணர்கிறார்கள்.குட்டித் தூக்கம் உறங்குவதால், இளைய தலைமுறையினருக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை…

அலுவலகத்தில், நாம் சற்றுநேரம் கண் அயரும்போது, அதை நமது உயர் அதிகாரி பார்த்துவிட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து நமக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நேஷனல் ஸ்லீப் பவுண்டேசன் அவர்களின் கருத்துப்படி, இரவில் மட்டுமே தூங்க வேண்டும் என்பது இல்லை. இது நமது வாழ்க்கை முறைக்கு உகந்ததும் அல்ல. மனிதன் போன்ற பாலூட்டி விலங்குகளில், உறக்கம் மேற்கொள்ளும் முறைகளில் பெரிய வேறுபாடுகளே நிலவி வருகின்றன.

பகல் தூக்கம்

குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், பகல்நேரங்களில் சிறிதுநேரம் உறக்கம் மேற்கொள்வது மிக சாதாரணமான நிகழ்வே ஆகும். வேலை பார்க்கும் இளைய தலைமுறையினரும் இந்த நடைமுறையை பின்பற்றினால் அதிக நன்மைகள் விளையும் என்பது நிபுணர்களின் கருத்துகளாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில், மக்களின் உறக்க நேரம் என்பது மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. மதிய உணவுக்கு பிறகு அரைமணி நேர உறக்கம் மேற்கொள்வதால், அது நம்மிடையே விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகின்றன. பகல்நேரங்களில் குட்டித் தூக்கம் போடுவதிவால்ல ஏற்படும் சாதக பாதகங்களை விளக்குகிறது இந்த கட்டுரை

​காபி

நாம் மிகவும் சோர்வாக இருக்கும்போது, நம்மையே அறியாமல், பல்வேறு தவறுகளை செய்யும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் காருடன் மோதுதல், எழுதும்போதும், பல்வேறு தவறுகள் ஏற்பட காரணமாக அமைகின்றன. 40 நிமிட கால அளவிலான குட்டித் தூக்கம், செயல்பாடுகளில் 34 சதவீத அளவிற்கு அதிகரிப்பதாக நாசா மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது விழிப்புணர்வாக இருக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீண்ட தொலைவுக்கு வாகனம் இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள், போதிய அளவிற்கு உறங்கினால் மட்டுமே, விபத்துக்கள் ஏற்படுவதில் இருந்து தடுக்க முடியும். சாலைகளில் வாகனம் இயக்குபவர்கள், அசதியாக உணர்ந்தால், உடனடியாக வாகனத்தை நிறுத்தி, சிறிதுநேரம் ஓய்வு எடுத்தபிறகே, மீண்டும் வாகனத்தை இயக்க வேண்டும். சிறிதுநேர உறக்கம் மற்றும் ஓய்வு ,சிறிய அளவு காபி, நம்மை சோர்வில் இருந்து காக்க உதவும்.

​இரவு நேர உறக்கத்திற்கு

குட்டித் தூக்கம் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்றாக இருப்பதில்லை. இது சிலருக்கு இரவுநேர உறக்கத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. பகல் நேரங்களில், அலுவலகத்திலோ அல்லது படுக்கையிலோ சிறிதுநேரம் உறங்கினால், அது இரவில் சரியான உறக்கமின்மைக்கு வழிவகுப்பதோடு, இன்சோம்னியா என்ற குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. இதன்காரணமாக, அடுத்த நாளில் அது சோர்வுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

குட்டித் தூக்கத்தின் நேரம், கால அளவை பொறுத்து, அது நம்மில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் நாம் குறைத்துக்கொள்ளலாம். குட்டித் தூக்கத்தை மதியம் 2 முதல் 3 மணிக்கு உள்ளாக, 10 முதல் 30 நிமிடங்கள் கால அளவு கொண்டதாக இருக்க வேண்டும். மதிய உணவு சாப்பிட்டதற்கு பின், குட்டித் தூக்கம் போடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

​ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது

மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குட்டித் தூக்கம் போடுபவர்கள், இந்த முறையை மேற்கொள்ளாதவர்களை விட, அதிக வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டது ஆய்வுமுடிவுகளில் தெளிவாகி உள்ளது.

18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஒரு குழுவினர் மற்றும் 60 முதல் 80 வயதிற்கு உட்பட்ட மற்றொரு குழுவினர் என இருதரப்பினர் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் இளைய தலைமுறையினர் அதிக வார்த்தைகளை ஞாபகம் வைத்துக்கொண்டது தெரியவந்தது.

​இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

குட்டித் தூக்கம், வயதானவர்களின் ஞாபக சக்திக்கு அதிகரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளநிலையில், இது வயதானவர்களுக்கு ரத்த அழுத்தத்தை குறைத்து, அவர்களுக்கு ஏற்படும் டிமென்சியா பாதிப்பின் அளவை குறைக்கிறது. வயதானவர்கள், குட்டித் தூக்கம் அடிக்கடி போடுவது, அவர்களின் உடல்நலனுக்கு மிகுந்த நன்மையை விளைவிக்கிறது.

மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, பல்வேறு பாதிப்புகளில் இருந்து ஒருவரை காக்க உதவுகிறது. நடுத்தர வயது ஆண் மற்றும் பெண்கள், குட்டித் தூக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டால், அவர்களது உடலில் ரத்த அழுத்தம் குறைந்து அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்பது திண்ணம்.

​சுவாச செயல்பாடுகளை பாதிக்கும் ஓய்வு

மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுபவர்களின் மூன்றில் ஒரு பகுதியினர், விரைவில் மரணம் அடைகின்றனர். இவர்களுக்கு புரான்கைடிடிஸ், எம்பைசிமா, நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளை 2.5 மடங்குக்கு அதிகரித்து விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குட்டித் தூக்கம், நமது உடலில் வீக்கங்கள் ஏற்படுவதை அதிகரிக்கிறது. குட்டித் தூக்கம், நமது உடலில் ஏற்கனவே உள்ள பாதிப்புகளை விரைவில் வெளிக்கொணர உதவுகிறது. குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு பாதியாக குறைவதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

​நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு

குட்டித் தூக்கத்திற்கும், நீரிழிவுக்கு தொடர்பு இருப்பதாக 2015 ஆம் ஆண்டில் வால்ட் ஸ்டிரீட் ஜெர்னல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை. குட்டித் தூக்கம், நீரிழிவு ஏற்படுவதற்கான பாதிப்பை அதிகரிக்க செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பகல்நேரத்தில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு, நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 56 சதவீதம் அதிகமாக இருப்பதாக டோக்கியோ பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேலாக குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு நீரிழிவு ஏற்படுவதற்கான பாதிப்பு 46 சதவீதம் அதிகரிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எவ்வளவு நேரம் குட்டித் தூக்கம் போட வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker