சமையல் குறிப்புகள்புதியவை

கத்திரிக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்:

* பெரிய கத்திரிக்காய் – 1

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)

மசாலாவிற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 3

* கடுகு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* புளி பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* கெட்டியான தேங்காய் பால் – 200 மிலி

* தண்ணீர் – 250 மிலி

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

* பின் கத்திரிக்காயை கழுவி, 2 இன்ச் நீளமுள்ள மெல்லியத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நிறம் மாறாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கத்திரிக்காயைப் போட்டு, சிறிது உப்பு தூவி, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் தக்காளியைப் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாக வேகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா, புளி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது தேங்காய் பால் மற்றும் நீரை ஊற்றி, மூடி வைத்து, கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, இறுதியில் வறுத்து வைத்துள்ள கத்திரிக்கயை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் கிரேவி தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker